Tuesday, December 15, 2009
சூடுபிடிக்கும் நம்ம ஊரு கிரிக்கட் - ராஜு vs சரவணா
ஊரைப்பற்றி சொல்லிகிட்டே போனா சரிவராது. ஊருக்குள்ள நடக்கிற கதைய சொல்லத்தான் நான் வந்தன். அது என்னன்னா நம்ம ஊர்ல ஒரு கிரிக்கட் டீம். அதிரடியான ஆட்டம் பிரபலமான பந்து வீச்சு அது மட்டமா ஆடுகளத்திலயும் அப்படித்தான். சும்மா கலக்குவானுங்க. இந்த டீமுக்கு கெப்டன் யாரு தெரியுமா? ராஜு!. அதிரடியான சகலதுரை ஆட்டக்காரன். நல்ல கெப்டன் (ராஜுட டீம் ரசிகர் கூட்டம் சொல்லுது) நல்ல கெப்டன் ஆனதுக்கு ஒரு ரீஸன் இருக்கு. அதுதான் நம்ம ஊர் என்னாலும் தோத்து போய்கிட்டு இருந்து பக்கத்து ஊர தோற்கடிச்சு கப்பை நம்ம ஊருக்கு கொண்டுவந்தது.
இந்த கப்ப வெல்றதுக்கு நம்ம ராஜு ரொம்ப கஸ்டப்பட்டிச்சு. டீம்ல இருக்கிற எல்லாரும் பயங்கரமா விளையாடி தன்ட பங்களிப்புகள செஞ்சாங்க. அதிலயும் ராஜு டீம்ல இருக்கிற சகலதுறை வீரன் சரவணாட பங்களிப்பு மிக முக்கியமானது. (வெற்றிக்கு பிறகு சரவணாதான் கேக் வெட்டினான் என்றா அவன் பங்களிப்பு எப்படி இருந்திருக்கும்) எப்படியோ எல்லாருமா சேர்ந்து விளையாடினதுல நம்ம ஊருக்கு கப்பும் வந்திருச்சு.(கப் நம்ம ஊருக்கு வந்ததுல பக்கத்து ஊரானுங்க கொஞ்சம் கோவமா இருப்பானுங்க என்றுதான் நினைக்கிறன்)
இந்த கப்ப நம்ம ஊருக்கு கொண்டுவந்ததுலதான் இந்த கதையே ஆரம்பிக்குது. இந்த வெற்றிக்கு பிறகு ராஜுக்கு சரவணாக்கும் இடையில ஒரு சின்ன முறுகல். ராஜு டீம் காசுல ஊழல் பண்றான் என்று சரவணா சொல்ல சரவணா பக்கத்து ஊரு டீமுக்கு விலை போறான் - என் கெப்டன் பதவிக்கு ஆப்பு வைக்க முயற்சிக்கிறான் என்று ராஜு சொல்ல இப்படி பிரச்சினை கூடிக்கூடி சரவணா ராஜு டீம்ல இருந்து வெளியில வாறான்.
சரவணா போனது ராஜுட டீமுக்கு பெரிய ஆப்பாக போயிருச்சு. அது ஏனென்டா இன்னும் கொஞ்ச நாள்ல ராஜுட டீமுக்கும் அதே ஊர்ல இருக்கிற ரமணா டீமுக்கும் ஒரு பெரிய மெட்ச் இருக்கு. இந்த மெட்ச்ல தோக்குற டீமுக்கு இன்னும் 6 வருஷத்துக்கு அந்த ஊர்ல கிரிக்கட்டே விளையாடே ஏலாது. இது அந்த முக்கியமான மெட்ச்ல இருக்கிற கன்டிசன். ராஜுட டீம்ல இருந்து சரவணா வெளியில வந்த கதை கேள்விப்பட்டதுமே ரமணா டீம் சரவாணாவ தன்ட டீமுக்கு எடுக்கிற முயற்சில இறங்கி இறுதியில சரவணாவ டீமுக்கு எடுத்துட்டாங்க.(நல்ல விலைக்கு விலை போனானோ தெரியல)
இப்ப மெட்ச்க்கு ரெடியாகிற காலம். ரெண்டு டீமும் பயங்கர பயிற்சி காலம். அது மட்டுமில்ல சரவணா ராஜு டீம்ல இருந்து வெளியில வந்தத பற்றி ஊரே கதக்கிற காலம். ராஜுதான் பக்கத்து ஊரோட நடந்த மெட்ச்ல வெல்றதுக்கு காரணம் என்று ஒரு கூட்டம். சரவணாதான் காரணம் என்று இன்னொரு கூட்டம். அதுமட்டுமா ராஜு அவன சுத்தி இருக்கிறவனுங்க நம்ம ஊர்ல வம்பலந்து திரியிற பயலுங்கள கூப்பிட்டு சரவணாவ பற்றி தப்பு தப்பா பேசுறதும் அதேபோல சரவணா அந்த பயலுங்கள (மீடியா பயலுங்களோ தெரியல) கூப்பிட்டு ராஜுவ பற்றி தப்பு தப்பா பேசுறதும் இந்த காலத்துலதான் நடக்குது. அதுமட்டுமா சரவணா டீம்ல இருக்கிறவனுங்க சரவணாவ நம்ம டீம்ல சேர்த்தது தப்பு என்று சொல்லிக்கிட்டு ராஜு பக்கத்துக்கும் ராஜு கெப்டன் பதவிக்கு சரியில்ல என்று சொல்லிக்கிட்டு சரவணா பக்கத்துக்கும் கிரிக்கட் வீரர்கள் தாவுரதும் இந்த காலத்துலதான்.
மொத்தத்துல இப்ப இது ரெண்டு டீமுக்கு மெட்ச் என்று சொல்றத விட ராஜுக்கும் சரவணாவுக்கும் இடையில நடக்குற மெட்ச் என்றுதான் சொல்லனும். ராஜுட டீமுக்கு பயிற்சி கொடுக்க பக்கத்து இந்தூர்ல இருந்து ஆள் வரப்போறாங்களாம். அப்படியென்னா இந்த மெட்ச் எப்படியிருக்கும்.
இந்த மெட்ச் நடக்குறதுக்கு முன்னால இன்னும் ஆயிரம் விஷயம் நடக்கலாம். நானும் கொஞ்சம் பார்த்துகிட்டுதான் இருக்கன். இன்னும் எழுதுறன். வேய்ட் பண்ணுங்க.
Monday, December 14, 2009
இந்த பதிவர்கள் எதத்தான் செஞ்சி கிழிக்கிறாங்க..
நான் முன்ன வேலை செஞ்ச ஆபிஸ்ல ஒரு பெடியன் இருக்கான். பெயர் வதீஸ். இவனால ஒரே தொல்ல.. எப்ப பார்த்தாலும் பதிவு ஆரம்பி பதிவு ஆரம்பி என்று சொல்லிகிட்டே இருப்பான். நான் பதிவு ஆரம்பிச்சு எதத்தான் எழுதி கிழிக்கிறது. இத வாசிச்சு முடிக்கையில அது புரியும் என்று நினைக்கிறன். சஞ்சிகைகளில எழுதுற கட்டுரைய எத்தன பேர் வாசிக்கிறானுங்க என்றே தெரியாது. (அவன் சொல்றதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாலயே இந்த பதிவ ஆரம்பிச்சாச்சு) ஆனா ஒன்னும் பதிய இல்ல.
அது அப்படியிருக்க 12ம் திகதி எனக்கு கோல் பண்ணி நாளைக்கு ஏதோ பதிவர் கூட்டம் இருக்காம். வா என்று சொன்னான். அடப்பாவி மவனே நான் பதிந்ததே இல்லயே என்று சொன்னேன். கேட்டானா.. புதிய ஆட்களும் வரலாம் வா என்றான். சரி போய்த்தான் பார்ப்பமே என்று
வதிஸ், நிரஞ்சன் என்கிற இரண்டு நண்பர்களுடன் அங்க போனன். அங்க போய் பார்த்தா தெரிஞ்ச மூஞ்சு ஒண்ண கூட காணம். எப்படியோ நிகழ்ச்சி இலங்கை வழமைப்படி 15 நிமிடம் தள்ளி 2.15க்கு ஆரம்பிச்சுது. ஒரு அக்கா (அக்காவோ தெரியல) எழும்பி ஏதோ வாசிக்க ஆரம்பிச்சாங்க. அப்பதான் இது இரண்டாவது பதிவர் சந்திப்பு என்று தெரிய வந்திச்சு. இப்படி ஏதோ ஏதோ சொல்லி தலைய குழப்பிட்டு போனாங்க.
அப்புறம் அறிமுகம் என்றாங்க. தன்ட பெயர் - பதிவிடும் பெயர் - பதிவின் பெயர் இதெல்லாம் சொல்லனுமாம். அடப்பாவி இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டனே. நான் எதச்சொல்றது.. எழும்பி என் பெயரையும் ஒரு வருஷத்துக்கு முன்னால ஆரம்பிச்ச இந்த பதிவுட பெயரையும் சொல்லிட்டு இருந்துட்டன். அப்புறமா ஒவ்வொருத்தனா அறிமுகம் சொன்னாங்க. ஒருத்தன் எழும்பினான். நான் புல்லட் - எதுலயோ வெடிச்சிகிட்டு இருக்கன். நான் வந்தி எதுலயோ வலம் வந்திகிட்டு இருக்கன் என்று சொன்னானுங்க. ஒரு மண்ணும் புரியல. (இதுக்கெல்லம் அர்த்தம் அப்புறம் புரிஞ்சுது) சரி இருந்துதான் பார்ப்பமே என்ற பார்த்துட்டு இருந்தன்
அப்புறமா கலந்துரையாடல். பிரயோசனமாக பதிதல், பதிவில் பெண்கள் பங்களிப்பு, பின்னூட்டல் இப்படி நிறைய கலந்துரையாடினாங்க. பாதி விளங்கவே இல்ல பாதிதான் விளங்கிச்சு. பதிவில் பெண்கள் பங்களிப்பு என்று சொல்லிகிட்டு ஒரு அக்கா முன்னால வந்து பேசினா பாரு. ஐயோ கலக்கிட்டாங்க. எப்ப முடியும் எப்ப முடியும் என்று பார்த்துகிட்டே இருந்தன். எங்க மேலும் - மேலும் என்று நீட்டிகிட்டே போனாங்க. முடியல. அதவிட எனக்கு தெரியாத தமிழ் எல்லாம் பேசுறாங்க. இந்த சொற்கலெல்லாம் நான் கேட்டதே இல்ல. பதிவு என்றே சொல்லே அப்பதான் தெரியும். ழ-ள-ல எழுத்துகளே எனக்கு சரியா உச்சரிக்க வராது. (நல்ல காலம் நான் பேசல்ல. பேசி இருந்தன் அப்புறம் பதிஞ்ச மாதிரித்தான்) இன்னொன்டு சொல்லனும். இடை இடையே நான் முதல்ல சொன்ன அந்த வெடிச்சிட்டு இருக்கிற புல்லட் எழும்பி ஏதேதோ சொல்வான். கொஞ்சம் தமாஸாதான் இருந்தது. நிறைய பேர் சிரிச்சாங்க. ஆனா கிட்ட இருந்த எனக்கே அவன் பேசினதுல நிறைய விளங்க இல்ல. நான் நினைக்கிறன் எனக்கு அவன்ட மொழிநடை விளங்க இல்ல என்று.. சரி சரி அத விடுவம்.
இப்படி போய்கிட்டு இருக்கும் போது சிற்றூண்டி தந்தாங்க. (அதுக்கு அப்புறம் அதுக்கு காசு வாங்கிட்டாங்க. அது வேற விஷயம்) சிற்றூண்டி நல்லா இருந்தது. சிற்றூண்டி முடிச்சிட்டு கை துடைச்ச டிசுவ வீசலாம் என்று டஸ்பின் தேடினன். கிடைக்கல்ல. நேரா சமயலறைக்கு போனன். ஒரு அக்கா இருந்தாங்க. டஸ்பின் எங்க என்று கேட்டன். அது இங்க இல்ல என்றாங்க. சரி. புதிவர்கள் இதுலயும் இன்போமல் போல அப்படியென்று நினைச்சிகிட்டு பக்கத்துல இருந்த ஒரு பேக்ல போட்டுட்டு வந்துட்டன்
பிறகு பேப்பர் வெட்டும் கேம், வட்டம்போடும் கேம் அப்படியென்று இரண்டு வைச்சாங்க. நாங்க தோத்துட்டம். அந்த அனுபவமும் நல்லாத்தான் இருந்தது. இப்படி கலந்துரையாடல் - சிற்றூண்டி – விளையாட்டு என்று நிகழ்ச்சியும் முடிஞ்சுது. அப்புறம் எனக்கு தெரிஞ்சவர்களிடமும் தெரியாத சிலரிடமும் சொல்லிட்டு புறப்பட்டன்.
என்னதான் சொன்னாலும் இந்த பதிவர் சந்திப்புலதான் பதிவர்கள் என்ன செய்றாங்க என்ற விளங்கிச்சு. அப்படியே நான் இன்டைக்கு பதிய ஆரம்பிச்சுட்டன். எழுதியதில் எதுவும் இருக்காது என்பது தெரியும். எனினும் ஒரு சிறு முயற்சியை எடுத்தேன். தொடர்ந்தும் எழுத முயற்சிக்கிறேன். நீங்களும் எனக்கு உதவி செய்ய வேண்டும். என்ன அப்படி பார்க்கிறீங்க. உதவி செய்யத்தான் வேணும்.
ஓகே.. அப்ப வரட்டா…

